யாழ்ப்பாணத்தில் 50 பேர் அதிரடியாக கைது!!

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 50 பேரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திகதி முதல் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.