கொழும்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு! நூற்றுக்கணக்கானோர் கைது

கொழும்பு – முகத்துவாரம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற குற்றச்சாட்டிலேயே அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 110 பேரும் கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.