மூன்றாவது தடவையாகவும் யாழ் ஐந்து சந்தியில் மாட்டிய மாவா!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் விற்பனை நிலையத்தில் மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டது.இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை ஐந்து சந்தி கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியும் கடந்த 7ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட போது, பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பட்டப்பட்டதுடன் அதனை தயாரிக்கும் மூலப்பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.