பாக்கு மரம் வெட்டச்சென்ற சிறுவனின் நிலை!

ஹெட்டிபொல பிரதேசத்தில் வெற்றிலைத் தோட்டத்தில் நடுவதற்காக பாக்கு மரங்களை வெட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாக்கு மரங்களை வெட்டியெடுத்து வருவதற்கு ஹெட்டிபொல பிரதேசத்தில் இருந்து பொல்கஹவெல பிரதேசத்திற்கு அயலவர் ஒருவரும் 14 வயதுடைய சிறுவனும் சென்றிருந்தனர்.

இதன்போது இவர்கள் வெட்டிய பாக்கு மரம், குறித்த சிறுவனின் தலையில் வீழ்ந்தமையினால் இந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

வெட்டிய மரம் தனது அருகில் விழுவதைக் கண்ட இந்தச் சிறுவன் தப்பிக்க முயன்ற போது, கால் தடுக்கி கீழே வீழ்ந்தார்.

இதன்போது, வெட்டிய பாக்கு மரம் சிறுவனின் தலையில் பட்டதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.