தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.