காலியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்தல பிரதேசத்தை சேர்ந்த உணவகத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டு பெண் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். அவர் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
ஹோட்டலுக்கு செல்லும் போது குறித்த சந்தேக நபர் இந்த பெண்ணை பலவந்தமாக பிடித்து கீழே தள்ளி துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனினும் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சீன பெண் தனது நண்பியின் ஹோட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளார். அதே ஹோட்டலில் சேவை செய்யும் ஊழியரே இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.