பொக­வந்­த­லாவையில், தாயை தாக்­கிய 11வயது மக­ன்: அதிர வைக்கும் காரணம்

பொக­வந்­த­லாவை செல்­வ­கந்த தோட்­டப்­ப­கு­தியில் தனது தாயைக் கல்லால் தாக்­கிய 11வயது சிறு­வ­னுக்கு பொக­வந்­த­லாவை நீதி­மன்றம் பிணை வழங்­கி­யுள்­ளது.தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோப­முற்றே தான் கல்லை விட்­டெ­றிந்­த­தாக மகன் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளான்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில்,தாக்­கு­தலில் தலையில் காயங்­க­ளுக்­குள்­ளான தாய் பொக­வந்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கிறார்.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குறித்த சிறுவன் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை வில­கி­யுள்ள நிலையில் அயல் வீடு­களில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்­கைக்கும் ஆத­ர­வாக இருந்­துள்ளான்.தந்தை தலை­ந­கரில் பணி புரி­வ­தா­கவும் அவ்­வப்­போது வீடு வந்து செல்­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் சிறு­வ­னது தாயின் வலது கை பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் அவரால் பணி­பு­ரிய முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.இந்­நி­லையில் சம்­பவ தின­மன்று மகன் வேலைக்கு செல்­ல­வில்லை எனவும் தனது பசிக்கு ஏதா­வது உணவு வழங்­கு­மாறு தாயிடம் கேட்­டுள்ளான்.இந்­நி­லையில் உணவு சமைக்க வீட்டில் எது­வு­மில்லை எனத் தாய் கூறவே, தாய்க்கும் மக­னுக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து தாய் மிளகாய்த் தூளை வீசி எறிந்­துள்ளார். இதனால் கோப­முற்ற மகன் கல்லை எடுத்து எறிந்­ததால் தாய் காய­முற்­றுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.