நல்லூரில் தற்போது நடைபெற்று வரும் திருவிழாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கந்தர்மடத்தில் இருந்து நேற்று மாலை சென்ற இளைஞனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இளைஞனின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன இளைஞனை பொலிஸார் தேடுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.