4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!!

தென் கொரியாவில் 64 நாடுகளைச் சேர்ந்த 4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தென்கொரியாவில் தேவாலயத்தில் கடந்த 1961- ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் 64 நாடுகளைச் சேர்ந்த 4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த 28 ஆயிரம் தம்பதிகள் இந்த நிகழ்வுக்கு வருகை தந்தனர்