யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
”ரெமடோல்” எனப்படும் ஒரு வகை போதை மாத்திரைகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 6000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் இந்த மாத்திரையை பலர் போதை பொருளாக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்ஸொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது ஜ-எல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.