பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வொளியாகியுள்ள தகவல்!

வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் மருத்துவர் சன்ன ஜயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களைநாசினி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.