நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படும் பாலாவி தீர்த்தக்கரை…

தற்போது மழை இல்லாத காரணத்தினாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாகவும் குளங்கள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் வற்றியுள்ளது.இதன் காரணமாக மக்களும், கால் நடைகளும் நீரை பெற்றுக்கொள்ளுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் பாடல் பெற்ற புனித தளமான மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தளத்தின் பாலாவி தீர்த்தக்கரையும் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றது.

இதனால் திருக்கேதீஸ்வர திருத்தளத்திற்கு வரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.