கஞ்­சா­வு­டன் இரு­வர் கைது

பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கஞ்­சாவை உட­மை­யில் வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரண்டு இளை­ஞர்­கள் நெல்­லி­ய­டிப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக அல்­வாய்ப் பகு­தி­யில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. 23 வய­து­டைய இளை­ஞன் 300 கிராம் கஞ்­சா­வு­டன் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரி­டம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. மற்­றொரு இளை­ஞ­னின் வீட்­டில் கஞ்சா இருக்­கும் தக­வலை அவர் பொலி­ஸா­ரி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னின் அலை­பே­சி­யி­லி­ருந்து மற்­றைய இளை­ஞ­னுக்கு அழைப்பு எடுக்­கப்­பட்­டது. கஞ்சா கொள்­வ­னவு செய்­ப­வர்­கள் போன்று பொலி­ஸார் அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்­ற­னர். அவர் நிலத்­தில் புதைத்து வைத்­தி­ருந்த ஒரு கிலோ கஞ்­சாவை எடுத்து வந்­த­போது பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் பொலிஸ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர். நீதி­மன்­றில் இன்று முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.