ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதம் ஒன்றுடன் காரொன்று மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(16) காலை யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குப் பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையொன்றில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.