ஆற்றில் முகம் கழுவச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

முகம் கழுவுவதற்காக நேற்று அதிகாலை கின் கங்கைக்கு சென்ற பஸ் நடத்துனர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலி – பாத்திவல பிரதேசத்தைச் சேர்ந்த சுபுன் பிரசாத் என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பிட்டிகல – காலி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மாப்பலகம பிரதேசத்தில் பேருந்தை நிறுத்தி கழுவியுள்ளார்.

அதன் பின் தனது முகத்தை கழுவ கின் கங்கைக்கு சென்றுள்ளார். அங்கு கால் வழுக்கி நதியில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மாப்பலகம பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.