கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

கிளிநொச்சியில் வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், அச்சிறுவனிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிறுவனை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவர், கிளிநொச்சி செல்வாநகரில் வசிக்கும் 8 வயதுடைய சத்தியசீலன் மதுசன் என தெரியவற்துள்ளது.

குறித்த சிறுவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையெனவும் ஆரம்பத்தில் குறித்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.