யாழில் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது மோதிய மோட்டார் சைக்கிள், சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

யாழ் புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9:00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புத்தூர் ஊறனி பகுதியினை சேர்ந்த இரத்தினம் மோகன் வயது(28) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என உறவினர்கள் கூறினர்.
சடலம் தற்போது அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.