முல்லைத்தீவில் ஆலய குருக்களுக்கு எமனான மாடு!

முல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது, மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.