தியாகி திலீபனின் நினைவேந்தலை -நல்லூரில் நடத்தத் தடையில்லை!!

தியாக தீபம் தி-லீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடத்துவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவு கூருவதைத் தடை செய்யும் வகையில், கட்டளை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.