பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட நிலை!

பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் தமிழர் ஒருவர் மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய கடவுசீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால், இன்று காலை 9.30 மணியளவில் சுவர்னபூமி, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேரடியாக பரிஸ் சென்றடையும் முயற்சியில் குறித்த நபர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரபு தர்மலிங்கம் என்ற 45 வயதான இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு அதிகாரி Pol Colonel Ploen Klinphayom தெரிவித்துள்ளார்.

தர்மலிங்கம், மலேசிய நபரின் கடவுசீட்டு புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குடியேற்ற அதிகாரிகள் முகஅடையாள நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, பல முரண்பாடுகளை கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் தர்மலிங்கம் ஒரு மோசடியாளர் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மலேஷியா சிங்கப்பூர் வழியாக அவர் மலேசியாவிற்கு பயணம் செய்து மலேசிய முகவரிடம் கடவுசீட்டு பெற்று கொண்டதாக தர்மலிங்கம் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

500,000 ரூபாய் பணம் இதற்காக தான் முகவருக்கு வழங்கியதாக இலங்கையர் தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து செல்வதற்காக பிரான்ஸில் விமான டிக்கட் பெற தான் திட்டமிட்டதாக தர்மலிங்கம் கூறியுள்ளார்.

புகலிடம் கோரி சுவிட்ஸர்லாந்தில் உறவினர்களுடன் தங்க தர்மலிங்கம் முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.