தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கொலை செய்த கணவன் வெளியிட்ட தகவல்!!

கடந்த 14ம் திகதி நள்ளிரவு மாத்தறை பொது வைத்தியசாலை பொலிஸாரிடமிருந்து டிக்வெல்ல குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது.

அதில், டிக்வெல்ல உந்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாத்தேகம, கட்டுகஹேவத்த, கொட்டகொட என்ற பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்த உடனேயே அந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

39 வயதான திஸ்னா பிரியதர்ஷினி என்ற ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் ஒரு மீனவர் ஆவார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் பிரதேசத்திலிருந்து காணாமல்போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் திஸ்னாவின் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது. சுமித் என்ற குறித்த நபர் திஸ்னாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளும் இருவருக்கும் பிறந்துள்ளனர். இந்த நிலையில் சுமித் குடிப் பழக்கத்திற்கு அடிமையானதால் திஸ்னா தொடர்பாக வேறு சந்தேகம் ஏற்பட திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கந்தர பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது வீதியில் நடந்து சென்ற நபரொருவரிடம் விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டுள்ளார்.

அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது திஸ்னாவின் மரணம் தொடர்பாக மேலதிக தகவல்களை தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடபெற்ற தினமன்று திஸ்னாவின் மகளின் மகளுக்கு சாப்பாடு ஊட்டும் விழா இருந்த நிலையில் திஸ்னா மற்றும் அவரது கணவர் அங்கு வந்துள்ளனர்.

நிகழ்வு முடிடைந்ததும் திஸ்னா கணவருடன் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். குழந்தைகள் கட்டில் மீது தூங்கியுள்ளார்கள். இந்த நிலையிலே திஸ்னா காலை செய்யப்பட்டுள்ளார்.

அவள் படுக்கையில் இருக்கும்போது நெஞ்சில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திஸ்னாவின் மரண பரசோனையில் 9 அங்குலம் வரை ஆழமான காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்பத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம்தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன