இறக்குவானையில் 8 ஆம் ஆண்டு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

இறக்குவானையிலுள்ள பாடசாலையொன்றில் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (26) மாலை தனது இல்லத்தில் வைத்து அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறக்குவானை ஒரஞ்பீல்ட் பிரதேசத்தை சேர்ந்த சதீஸ் வயது (13) என்ற மாணவனே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேற்படி மாணவனின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக நேற்று மாலை (26) இறக்குவானையிலிருந்து காவத்தை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் இன்று (27) மரண பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

மேற்படி மாணவனின் தற்கொலை சம்பவம் குறித்து இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.