இலங்கையின் காலி கொழும்பு பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் இன்று 7.5 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்தநில நடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






