இலங்கையில் வீடு ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய 23 பாம்பு குட்டிகள்!

மின்னேரியா – ஜயன்திபுர பிரதேச வீடு ஒன்றில் 23 பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் நேற்றைய தினம் பாம்பு குட்டிகள் 15 இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று 08 குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்த பாம்புகுட்டிகள் கிறிதலே வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வீட்டில் மேலும் பாம்பு குட்டிகள் உள்ளனவா என பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.