பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சற்று முன்னர் கோர விபத்து….! பயணிகளின் கதி என்ன?

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

முழங்காவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தே தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பூநகரி மற்றும் யாழ் போதனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.