யாழில் நிலத்தை தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியவருக்கு அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது அங்கிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலம் தோண்டப்பட்டுள்ளது.

இதன் போது இவ்வாறு , கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.