வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு சம்பவங்கள்

வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு சம்பவங்கள்
வவுனியா செட்டிகுளம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் இடம்பெற்றுள்ளது
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின்போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில் மனித கண் தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள வீட்டில் வழை மரம் ஒன்றில் நடுப்பகுதியில் வாழைப்பூ தள்ளிய அதிசயமும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வழைப் பூ வாழையின் மேலிருந்தே வருவதை அவதானிக்க முடியும் ஆனால் இன்று வழமைக்கு மாறாக வாழையின் நடுப்பகுதியில் வாழைப் பொத்தி தள்ளி அப்பகுதியில் அதிசயம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற இரண்டு அதிசயங்களையும் அறிந்த மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.