யாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்தை வழிமறித்த பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ,
கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.