யாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..!!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அந்தச் சத்தம் கேட்டுக் காப்பாற்றச் சென்ற அயல் வீட்டுக்காரரையும் கொட்டன்கள், வாள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பத்தில் 7 பேர்காயமடைந்தனர் என்று கூறப்படுகின்றபோதும் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி, கச்சாய் வீதியில் உதயசூரியன் கிராமத்தில் நடந்துள்ளது.

7க்கு மேற்பட்ட உந்துருளிகளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. வீட்டுக்குள் நுழைந்து பெண்களைத் தாக்கி வீதிக்கு இழுத்து வந்துள்ளனர்.

அந்தச் சத்தம் கேட்டுத் திரண்ட அயலவர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களை நெருங்கிச் சென்ற இருவர் மீது கொட்டன்கள், வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் இருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரு இளைஞர்களுக்கு இடையே மோதல் நடந்து என்றும், அதில் ஒருவர் சிறு காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாகவே நேற்றைய தாக்குதல் நடந்துள்ளது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.