கொழும்பில் இளம் பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் : வெளியான காணொளியால் சர்ச்சை!!

கொழும்பில் இளைஞன் மற்றும் பெண் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நுகேகொட பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவருடன் சென்ற இளைஞன் ஒருவரை இன்னும் சில இளைஞர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஹெல்மட் உதவியுடன் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞனுடன் சேர்ந்து குறித்த பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.