யாழில் முடங்கியது போக்குவரத்து!

யாழில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பழைய பார்க் வீதிக்குக் குறுக்காக பாரிய மரமொன்று சரிந்துவீழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.