யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணத்துக் கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த பெண் சமிக்ஞை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது விபத்தில் குழந்தையும், தாயும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த தாயின் கால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் குழந்தையின் தலைப்பகுதி காயப்பட்ட நிலையில், அவ்வீதியால் பருத்தித்துறையிலிருந்து வருகைதந்த நோயாளர்
காவு வண்டியில் குழந்தையும், தாயும் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் மோட்டார் சைக்கிள் காற்றுப்போன
காரணத்திலேயே கட்டுப்படுத்த முடியாமல் மோதியதாக சம்பவ இடத்தில் விசாரணை செய்த பொலிசர்ரருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.