சர்வதேச சமூகம் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்! கோத்தபாய கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் பின்னர் சர்வதேசம் மற்றொருவருக்கு ஆதரவை வழங்கியது. எனினும் அதனால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே மீண்டும் நாட்டை பிரச்சினைக்குள் கொண்டு செல்லவேண்டாம் என்று கோத்தபாய கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வந்து நாட்டு மக்களை காப்பாற்ற மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.