நாளை பிரதமராக கடமைகளை பொறுப்பேற்கும் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கத்திலும் மஹிந்த ராஜபக்ச பிரதமராக கடமையாற்றியிருந்தார்.

மேலும், இலங்கையின் 22ஆம் பிரதமராக நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.