வேறு மாவட்டங்களிலிருந்து வந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய தாதியர்கள் கௌரவிக்கப்பட்டனர்…

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து யாழ் போதனா வைத்தியசாலையில் 3 வருடங்களுக்கு மேலாக தாதியர்களாகக் கடமையாற்றி தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு  யாழ் போதனா வைத்தியசாலையில்நடைபெற்றது.

கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து யாழ் போதனை வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றிய வெளிமாவட்டங்களை தமது சொந்த இடமாக கொண்ட தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது…இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நிர்வாக இயக்குனர் மற்றும் கணக்காளர் ஆகியோர் கலந்து கொண்டு தாதியர்களுக்கு நினைவு பரிசில்களை வழங்கியதோடு நன்றிகளையும் தெரிவித்தனர்..