நாடாளுமன்ற அமர்வை இந்த மாதம் 14ம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
16ம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே நடத்துமாறு பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு தினங்கள் முன்னதாக முன்கூட்டி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி முடிவு செய்திருக்கிறார்.
எனவே சபாநாயகர் அறிவித்தபடி சபை தீபாவளிக்கு மறுதினம் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.






