ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.