கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது…

திருகோணமலை – சீனன்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதியை இந்தியாவிற்கு கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறி கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.