கொழும்பில் ஒரே நேரத்தில் இரு மாபெரும் போராட்டங்கள்! ரணிலுக்கு ஆதரவாக திரண்டுள்ள மக்கள்

கொழும்பில் இன்று ரணில் மற்றும் மஹிந்தவுக்காக இரு வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலில் மஹிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும் குறித்த போராட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதுடன், தமது ஆதரவுகளை வெளியிட்டு வருகின்றனர்.