இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் சிக்குவாரா மஹிந்த? உண்மைகளை அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று கொள்வதற்கு இலஞ்சம் வழங்கும் மஹிந்த – மைத்திரி தொடர்பில் சர்வதேசம் அவதானம் செலுத்தியுள்ளது

இலங்கை அரச ஊடகங்கள் அல்லது வேறு தனியார் ஊடகங்கள் உட்பட வெளியிடாத செய்திகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் முதல் கட்டமாக அல்ஜெஸிரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டாமல், ராஜபக்ச பிரதமர் பதவியை பெற்று கொள்வதற்காகவும், உறுப்பினர்களை தங்கள் பக்கம் எடுத்து கொள்வதற்குகம் ஜனாதிபதி மைத்திரி மற்றும் மஹிந்த இலஞ்சம் வங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தை கூட்டும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டும் குறித்த செய்தி சேவை, நாடாளுமன்றத்தை திறப்பதற்கு மேலும் 10 நாட்களில் தாமதமாகின்றமையினால் இந்த பிரச்சினை மேலும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.