இழந்ததனை மீள பெற்ற ரணில்! கடும் அதிர்ச்சியில் மஹிந்த

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு ஏற்கனவே இருந்தவாறே வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பான முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, நளின் பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

அதற்கமைய, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு கடந்த 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து ரணிலுக்கு சாதகமான விடயங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மஹிந்த கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.