7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்…

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர்.

கடந்த காலங்களில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்க கடமைகளுக்காக சென்றது இல்லை.

இப்படி இருக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மகிந்த பக்கம் யாரும் தனது கட்சி உறுப்பினர்கள் ஓடி விடுவார்கள் என்ற அச்சத்திலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வருவதாக கூறிய சூழலில் நேற்று முன்தினம் யாரும் செல்லமாட்டார்கள் என ஹக்கீம் கூறியிருந்தார்.

இப்படி பலரும் பயங் காட்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களை காப்பாற்ற ஒரே வழி மார்க்கத்தை காட்டி விமானம் மூலம் எல்லோரையும் ரணிலின் ஆலோசனைப்படி ஏற்றி விட்டார் ஹக்கீம்.

சில வேளை மக்காவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஹக்கீம் சத்தியம் வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம் குர்ஆனில் மக்காவில் சத்தியம் செய்து பின்னர் அதனை மீறினால் மார்க்கத்தின் படி மகா பாவமாக கருதப்படுகிறது.

கல்முனை காரீஸ் எம்.பி அன்மையில் மகிந்தவை சென்று சந்தித்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

ஒட்டு மொத்தத்தில் மகிந்த – மைத்திரியிடம் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடம் புனித மக்கா என்பதை உணர்ந்த ஹக்கீம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்தின் பெயர் குறிப்பிடாத உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.