பரபரப்பான சூழலில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு!

இன்று (14) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.