வெற்றிக்கு பின்னர் ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி – மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொடூரமான நிறைவேற்று அதிகாரத்திற்கு மக்களை பலியாக்குவதா அல்லது ஜனநாயகத்தை மேலும் வலுவாக உறுதிப்படுத்துவதா என்ற நெருக்கடியான தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் நாடு தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.