பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் சகமாணவர்கள் கைதுசெய்யப்படுதல் மற்றும் பொறியில் பீடத்தில் சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டிருத்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.