நேற்றைய தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே மைத்திரிக்கும் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இடையூறுகள் அற்றநிலையில் வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அமைதியான முறையில் வாக்கெடுப்பை நடத்த ஜனாதிபதி நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின்போது இணக்கம் வெளியிட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் நேற்று மஹிந்த தரப்பினர் நாடாளுமன்றத்தில் தகாதமுறையில் நடந்துக்கொண்டனர். இந்தநிலையில் மைத்திரிபாலவுக்கும் இந்த தாக்குதல் சம்பவம் தெரிந்திருந்ததாக கூறும் வகையிலேயே தயாசிறி ஜெயசேகரவி;ன் கருத்து வெளியாகியுள்ளது.