மாத்தறை எலவேல்ல வீதியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 19 வயது மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் இருந்த மோதல்களின் விளைவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மாணவனின் இளைய சகோதரருக்கிடையில் இருந்த மோதல் இந்த கொலைக்கான காரணம் என கொழும்பு ஊடகமொன்றுக்கு பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரான மாணவர் உட்பட மூவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை உயிரிழந்த மாணவன் உட்பட ஏனைய மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று திரும்பிய வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திககொட நாயிம்பல மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ரசிது ஹிம்கான என்ற மாணவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.






