பிரித்தானிய பெண்ணை இப்படி செய்தவருக்கு!! மஹிந்த இப்படியா செய்வது??

பிரித்தானிய பிரஜை படுகொலை செய்து அவரது காதலியை பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்திய குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் தங்கல்ல பிரதேச சபையின்முன்னாள் தவிசாளர் சம்பத் விதானபத்திரனவை சிறைச்சாலைக்கு சென்ற சிறிலங்காவின்பிரதமராக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச. அவரது சுக துக்கங்களை விசாரித்திருக்கின்றார்.

மஹிந்தவின் கடந்த ஆட்சிக்காலத்தில் தலைநகர் கொழும்பில் வைத்து ஐந்துமாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பானவழக்கின் இரண்டாவது சந்தேக நபராக இணைக்கப்பட்டுள்ள முப்படைகளின் பிரதானி அட்மிரல்ரவீந்திர விஜேகுணரத்னவை நவம்பர் 29 ஆம் திகதியான இன்றைய தினம் வெலிக்கடைசிறைச்சாலைக்கு சென்று மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து மஹிந்தவின் விசுவாசியான தங்கல்லை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளர் சம்பத் விதானபத்திரனகே தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின்சிறைகூடத்திற்கு சென்று அவரது நலனை மஹிந்த விசாரித்திருக்கின்றார்.

சுமார் 20 நிமிடங்கள் குறித்தசிறைகூடத்தில் மஹிந்த இருந்ததாக சிறைச்சாலைத்தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சம்பத் விதானபத்திரனகே என்பவர்.

இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலமான 2011 ஆம் ஆண்டுதங்காலை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வைத்து பிரித்தானிய பிரஜையான குராம்ஷெயிக்கை படுகொலை செய்து அவரது காதலியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம்தொடர்பில் அப்போதைய தங்காலை பிரதேச சபையின் தவிசாளராக இருந்த மஹிந்த ராஜபக்சவின்மிக நெருக்கமான அரசியல்வாதியான சம்பத் விதானபதிரனகே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டிருக்கின்றார்.