நெருக்கடியான நிலையில் இன்று கூடும் நாடாளுமன்றம் : முக்கிய யோசனை சமர்ப்பிக்க நடவடிக்கை!!

நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கமைய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 7 பேர் யோசனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அரசியலமைப்பின் 48 வது சரத்திற்கமைய மேற்கொள்ள வேண்டிய அடுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை நீதிமன்றினால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பிற்கமைய அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இன்று யோசனையாக முன்வைக்கப்படவுள்ளது