முட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த நீதியான தீர்ப்புடன் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு தற்போது பலமானது. ஜனநாயகம் உறுதியானது ஆனால் இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும்.

தேவையற்றவர்களின் ஆலோசனை கேட்டு எனினும் ஜனாதிபதி செயற்படக் கூடாது.

இது நாட்டுக்கு கிடைத்த வெற்றி.ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள். இனியும் இந்த நாடகம் வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.